திரு. தம்பிராசா சுரேஷ்குமார்
தோற்றம்: 31 மார்ச் 1968 - மறைவு: 14 மார்ச் 2025
கண்டி - கம்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராசா சுரேஷ்குமார் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - இரத்தினம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செந்தில்வதனி (பிரதி கல்விப்பணிப்பாளர் - பெருந்தோட்டப் பாடசாலை கிளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிவேதனாவில் (NIT - திருச்சி) பாசமிகு தந்தையும்,
மனோரஞ்சிதம், சாந்தி, சரஸ்வதி, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷ்மி, நிரஞ்சலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
நேஹா ஸ்ருதி, பூஜா, ஸ்ருதி, சித்தாரா, மஹிஷாயினி, ஹரிஷியாம், மயூரி, சரயூ, கவினேஷ், ட்ரியா, ரிசுதி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இல-63, கீரப்பனை, கம்பளை இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- மனைவி.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
