Mr. Thambu Indrasamy
(முன்னாள் அரசாங்க நிர்வாக அலுவலர் - நல்லூர், முன்னாள் ஆசிரியர் - மன்னார் பெரியமடு)
Date of Birth: 29 August 1948 - Deceased: 07 June 2025
யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - கான்பராவை (Canberra) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இந்திரசாமி அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு - செல்லம்மா அவர்களின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் - புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, மகாதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரோஜா (அவுஸ்திரேலியா), அவர்களின் பாசமிகு கணவரும்,
ஹேமா (அவுஸ்ரேலியா, Canberra), ரேகா (அவுஸ்ரேலியா, Adelaide) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன் (அவுஸ்திரேலியா, Canberra) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சின்னையா அவர்களின் அன்பு மைத்துனரும்,
கோமதி (இலங்கை), பானுமதி (கனடா), வளர்மதி (அவுஸ்திரேலியா), சண்முகதாசன் (இலண்டன்), அழகுமதி (இலங்கை) ஆகியோரின் தாய் மாமனும்,
தரண்யா, ஹரேஷன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுழிபுரம் பொன்னாலையில் உள்ள இல்லத்தில் 09-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொன்னாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சரோஜா-மனைவி, ஹேமா - மகள், ரேகா - மகள்
www.tamilthakaval.org
