திரு. தம்பு கந்தையா இராஜேந்திர ராவ்

தம்பு கந்தையா இராஜேந்திர ராவ்

மறைவு: 01 பெப்ரவரி 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், செம்மணி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு கந்தையா இராஜேந்திர ராவ் அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை 4.40 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சீதாலட்சுமி தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனந்தன், ஜயானந்தி (மக்கள் வங்கி - சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மோசெஸ் பத்மலால் (சுகாதார அமைச்சு - வடக்கு மாகாணம்), துஷானி (மாகாண சுகாதாரத் திணைக்களம் - வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ணிகா, லிதுர்ஷிகன், ருத்விக், லக் ஷிவ் ஆகியோரின் பேரனும்,

சுசீலாதேவி, வத்சலா (ஜேர்மனி), கௌசலா (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சந்திராதேவி, இந்திராதேவி, தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான நவரட்ணம், துரைசிங்கம், இராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.30 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-
இல - 23/01 வெயிலுகந்த பிள்ளையார்
கோவில் ஒழுங்கை, செம்மணி வீதி, நல்லூர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 05:00)