திருமதி. தமிழினி பிரபாகரன்

(அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் உடுவில்)

தமிழினி பிரபாகரன்

தோற்றம்: 08 ஜூன் 1977 - மறைவு: 22 செப்டம்பர் 2021

யாழ். கோப்பாய் மத்தி ஆஸ்பத்திரியடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் K.K.S வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழினி பிரபாகரன் அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம் (நில அளவை திணைக்களம்), பேரின்பராணி (லிகிதர்- யாழ் கச்சேரி) தம்பதிகளின் அன்பு மகளும்,

கிருஸ்னர் வயிரவப்பிள்ளை, காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் (ஆசிரியர்- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

துவாரகன் (மாணவர்- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,

ஜமுனா (சுவிஸ்), ஜெயமயூரன் (லண்டன்), யாழினி (லண்டன்), கஜேந்திரா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வக்குமார், மனோஜா, மதியழகன், தனோஜா, சுதாகரன் கார்த்திப்பிரியா(துபாய்), வரதராஜன் (உதவி பிராந்திய முகாமையாளர் Abans), சுதர்சினி (அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம் உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rip"
- Sathiyarajan murugesu (United kingdom , 24/09/2021 21:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2021 11:53)