திரு. தாமோதரம்பிள்ளை மணிவாசகர்

தாமோதரம்பிள்ளை மணிவாசகர்

தோற்றம்: 22 ஜூலை 1941 - மறைவு: 20 ஜூன் 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தாமோதரம்பிள்ளை மணிவாசகர் அவர்கள் 20-06-2026 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணசுந்தரம் - செல்லப்பாக்கியம் தம்பதியினரின் அருமை மருமகனும்,

ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேஸ்வரியின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பழனிவேல், செல்வசுந்தரம் மற்றும் விஜயசுந்தரம், ஜெயசுந்தரம், காலஞ்சென்ற ஸ்ரீசுந்தர், ரதி, யசோதரன் ஆகியோரின் மைத்துனரும்,

பிரபாகரன், யமுனா, வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெசிக்கா, சிவராஜ், தமிழ்மணி ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமனாரும்,

தாரணி, சிவானி, தயானி, ஷாலினி, தகிப் ஆகியோரின் செல்லப் பேரனும்

சந்திரா, ஸ்ரீகாந்தன், தனுஜா ஆகியோரின் ஆசைத்தாய்மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று  வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2026 00:00)