திரு. தாமோதரம்பிள்ளை பாக்கியநாதன்
(புகைப்படக் கலைஞர்)
தோற்றம்: 12 மார்ச் 1945 - மறைவு: 22 செப்டம்பர் 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை பாக்கியநாதன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தங்கநாச்சியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லலிதாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிசுதனின் (இலண்டன்) பாசமிக்க தந்தையும்,
கிருத்திகாவின் (இலண்டன்) அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், சுந்தரலிங்கம், மிருணாளினிதேவி, சியாமளாதேவி, கலாதேவி, நவனீதநாதன் (இலண்டன்), சிவநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை), முத்துவேற்பிள்ளை, கௌரிமுகுந்தன் (முன்னாள் நகர சபை உறுப்பினர்), வரதராஜினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,
சரஸ்வதி, யோகேஸ்வரி, சிவஞானசுந்தரம், பாஸ்கரநாதன், ராதாமணி (இலண்டன்), சாந்தினி (ஜேர்மனி), காலஞ்சென்ற தேவிகாராணி (ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை), இந்திராணி, சுரேஸ்வரி (சுரேஸ் முன்பள்ளி), சுரேஸ்வரன் (ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர் - RDD) ஆகியோரின் மைத்துனரும்,
மதுமதி, Dr. சதாகரன், சண்முகபிரகாஸ், பிரணவன், மதுராந்தன், கஜேந்திரன் (பொறியியலாளர்), ரிஷிகேசவன், குருபரன், பகீரதன், தேவதர்ஷினி (இலண்டன்), தர்மவிலாஷினி, மோஷிகரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
புருஷோத்தமன், பரந்தாமன், மாதுமை, மயூரி, காலஞ்சென்ற சுறம்மியா, பிறவிந் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல-2, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
