திருமதி. தாமோதரம்பிள்ளை தவம் (தவமணி)
தோற்றம்: 23 நவம்பர் 1938 - மறைவு: 27 டிசம்பர் 2023
யாழ். அரியாலை தபால் கட்டை சந்தி கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், Neasden, லண்டன் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தவம் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை - செல்லம்மா தம்பதியினரின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
உபயசேகரம் (ஓய்பெற்ற உப அதிபர் - யாழ்/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்) அவர்களின் ஆருயிர் அருமைச் சகோதரியும்,
யோகேஸ்வரி (ஓய்வுபெற்ற உப அதிபர் - நல்லூர் தெற்கு ஶ்ரீ விக்னேஸ்வர வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகராஜா, சரஸ்வதி, பிரகலாதன், திருலோகேஸ்வரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லண்டனைச் சேர்ந்தவர்களான தருமசீலன், கலாநிதி தியாகசீலன், கேமளாநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லண்டனைச் சேர்ந்தவர்களான வனமாலா, ஜீவேந்திரா, பிரியா, பத்மஶ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லண்டனைச் சேர்ந்தவர்களான கோகுல், தனுஷியா, மயூராஜ், லக்ஷியா, லக்ஷன், குயிலி, கஜனி ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
Dr. கோபி (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), செந்தூரன் (பொறியிலாளர் யாழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபை) ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
