திருமதி. தனலட்சுமி கிருஷ்ணசாமி
தோற்றம்: 18 மே 1934 - மறைவு: 28 ஜனவரி 2025
"அணைந்தது எமது அன்னையெனும் தீபம்"
நுவரெலியா - கந்தப்பளை, கோட்லொட்ஜை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தனலட்சுமி கிருஷ்ணசாமி அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி நாயுடு - சிங்காரி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் அன்பு மனைவியும்,
விவேகானந்தன் (சட்டத்தரணி), ஸ்ரீகாந்தன், கற்பகராணி, மேனகா, பானு ஆகியோரின் அன்பு தாயாரும்,
கோதண்டராமன், ராஜேந்திரன், சிவப்பிரகாசம், வசந்தசேனா, மணிமொழி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2025 புதன்கிழமை களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-01-2025 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் நெதிமாலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
