(14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில்)

திருமதி. தனலட்சுமி இரத்தினதுரை

தனலட்சுமி இரத்தினதுரை

தோற்றம்: 26 நவம்பர் 1932 - மறைவு: 11 நவம்பர் 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி இரத்தினதுரை அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நடராஜா தம்பதியினரின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினதுரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சங்கர், முகுந்தர், உடேஷர், திவாகர் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

புஷ்வதனா (வசந்தி), சுரணி, காலஞ்சென்ற ஷஷி, வஜிரா ஆகியோரின் மாமியாரும்,

ஷெந்தூரன், அபர்ணா, மேனுகா - சிந்துஜன், மினேஷ் - தினாலி, மலீஷி, திவாஞ்சன் ஆகியோரின் அப்பம்மாவும்,

பிரஹண்யா, ப்ரித்விகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ண (அரலிய) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2025 00:00)