திருமதி. தனலட்சுமி புவனேந்திரன்
தோற்றம்: 08 ஆகஸ்ட் 1948 - மறைவு: 13 ஆகஸ்ட் 2025
யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தை - தேவன்குறிச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி புவனேந்திரன் அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகலிங்கம் - சின்னமணி தம்பதியினரின் அன்பு மகளும், முத்தையா - பூமணி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
காலஞ்சென்ற ஈழநாதன், புவர்ணலதா (துர்க்கா), தேன்மொழி, இளம்பரிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கதாதரன், மயூரன், பிரம்யா, துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிஷா, கபிஷன், மகிழினி, சங்கவி, தணிகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
தேனகா, ஆதிரன், மகதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற தங்கராசா, வசந்தநாயகி, மகேந்திரன், இராசேந்திரம், காலஞ்சென்ற தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2025 மாலை முதல் இலக்கணாவத்தை - தேவன்குறிச்சியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் எள்ளங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
