Mrs. Thanaletchumi Paramananthavel

Thanaletchumi Paramananthavel

Date of Birth: 04 June 1949 - Deceased: 22 April 2024

யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சிவபுர வீதியை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா, திருச்சி, சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி பரமானந்தவேல் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் - சிவகங்கை தம்பதியினரின் மூன்றாவது மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - இராரெத்தினம் தம்பதியினரின் மூத்த மருமகளும்,

பரமானந்தவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

ராதாராம், கவிதா, ஶ்ரீதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராமானந், வரதன், சுபாஜினி ஆகியோரின் மாமியாரும்,

சஞ்சிதா, பிரித்திகா, ஓவியா, அதிலா ஆகியோரின் அன்புப் பேத்தியம்,

காலஞ்சென்றவர்களான அருமைச்சந்திரலிங்கம் (துரைமணி), மங்கையற்கரசி (அம்மன் கிளி) மற்றும் ஜெயக்குமார் (சித்தப்பா), விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (லண்டன் சித்தப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மயிலேறும் பெருமான் (சண்டி), பாலசுப்பிரமணியம், நித்தியானந்தவேல் (நித்தி), சந்தியானந்தவேல் (செந்தி), தெய்வக்கனி மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 24-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்று, திருச்சி ஓயாமாரி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2024 04:00)