திரு தங்கையா செல்வராஜா
மறைவு: 18 பெப்ரவரி 2024
மாத்தளை ஓவிலுகந்தையைப் பிறப்பிடமாகவும், சில காலம் கொழும்பில் வசித்தவருமான திரு. தங்கையா செல்வராஜா அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கையா - மூக்காயி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,
சுப்ராயன் KP (உணுகலை) - தெய்வானை அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வமலர், செல்வபிரியா, விக்னேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் தகப்பனாரும்,
சத்தியசீலன் (கொழும்பு) அவர்களின் மாமனாரும்,
கணேஷன் (வவுனியா), சாரதா (மாத்தளை), சிவநேசன் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,
திரவியராஜா (கனடா) அவர்களின் மைத்துனரும்,
தனுஷ்வர், தஸ்வினா, ஹம்ஸினி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல-101, அரஸ்கம ரோட், அகலவத்தை, மாத்தளையில் உள்ள இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, 21-02-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மந்தண்டாவளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
