திருமதி. தங்கம்மா விஜயரட்ணம்
தோற்றம்: 10 ஜூலை 1933 - மறைவு: 02 செப்டம்பர் 2021
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா விஜயரட்ணம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மா. விஜயரட்ணம் அவர்களின் அன்பு துணைவியாரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அன்னலிங்கம் மற்றும் நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராஜா (கொழும்பு), அரியநாயகம் (கனடா), கமலாதேவி (கொழும்பு), ஸ்ரீதரன் (இங்கிலாந்து), பத்மசீலன் (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ருக்மணிதேவி, செல்வராணி (கனடா), ராமகிருஷ்ணன் (கொழும்பு), ஞானாம்பிகை (இங்கிலாந்து), சுஜாதா (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
