திரு. தங்கராஜா சுபாஸ்
(பொலிஸ் உத்தியோகத்தர்- கோப்பாய் பொலிஸ் நிலையம்)
தோற்றம்: 29 ஜூலை 1991 - மறைவு: 14 நவம்பர் 2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கராஜா சுபாஸ் அவர்கள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா-குமாரதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
கோபாலசிங்கம்-தேவராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தாரணி (ஆங்கில ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
சியாம், அபர்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாட்ஷாவின் அன்பு மாமனாரும்,
யுகேந்திரன், சுபத்திரா, பிரதுபன், தினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரகலாதன், நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அஸ்வினி, அட்ஷரா, யுகிஷரன், கபிஷரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூனாவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
