திருமதி. தங்கராசா பார்வதிப்பிள்ளை

(ஓய்வு நிலை ஆசிரியை)

தங்கராசா பார்வதிப்பிள்ளை

தோற்றம்: 12 ஜனவரி 1937 - மறைவு: 13 ஜூன் 2024

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கராசா பார்வதிப்பிள்ளை அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

கதிரித்தம்பி-இளையபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கதிரித்தம்பி தங்கராசா (ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தங்கம்மா, நல்லம்மா, காலஞ்சென்ற இரத்தினம், மயில்வாகனம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வஇரத்தினம், செல்வராசா, நடராசா, தங்கமலர் மற்றும் யோகமலர், காலஞ்சென்றவர்களான பூமலர், நேசராசா, மல்லிகாமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)