திரு. தர்மலிங்கம் ஜோதீஸ்வரன்
தோற்றம்: 19 டிசம்பர் 1951 - மறைவு: 27 ஆகஸ்ட் 2024
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் ஜோதீஸ்வரன் அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்-அன்னப்பா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி. நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற உலக நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குலசிங்கம், நாகராசா, மாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜேந்திரன் அவர்களின் அருமைத் தந்தையும்,
மோகனா அவர்களின் அன்பு மாமானாரும்,
கார்த்தீகன் அவர்களின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கலாநிதி, டேவிட், குகன்தேவி மற்றும் நம்பிரான் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 29-08-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
