திரு. தர்மலிங்கம் தர்மரத்தினம் (ரத்தினம்)
தோற்றம்: 05 செப்டம்பர் 1954 - மறைவு: 03 ஏப்ரல் 2024
யாழ். திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் தர்மரத்தினம் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்ற கதிரவேலு - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஞானேஸ்வரி (சாந்தா) அவர்களின் அன்புக்கணவரும்,
காயத்திரி, மணிபாரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரு. தர்மகுலசிங்கம், திருமதி. தர்மபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரு. அருளம்பலம், காலஞ்சென்ற திருமதி. தேவராணி, திரு.திருமதி அருட்செல்வம்-பத்மாவதி, திரு.திருமதி உதயகுமார் - குமுதினி, திரு.திருமதி மனோகரன் - வசந்தி, திரு.திருமதி குகரூபன் - ஹேமா தம்பதியினரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 08-04-2024 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை Beim St. Peter 4/2 75417 Muhlacker இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org