திரு. தர்மலிங்கம் தவலிங்கம்
மறைவு: 18 மே 2026
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் தவலிங்கம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - பார்வதி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற இரத்தினதுரை - அன்னலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகன், ரிஜானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரவணபவானந்தன் பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவரத்தினம் தங்கராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பவானந்தன் யோகமலர், தேவராசா உலகேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரி கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அனிதா இந்திரன், ஜெனிதா குமணன் மற்றும் வினிதா மதனகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பிற்பகல் 2.00 மணியளவில் நீர்வேலி சிவியாகாடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
