திருமதி. தர்மபூபதி இராசலிங்கம் (தவம்)

தர்மபூபதி இராசலிங்கம் (தவம்)

தோற்றம்: 05 மார்ச் 1937 - மறைவு: 06 ஜூன் 2022

யாழ். வலி வடக்கு வர்த்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், இணுவில், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களைப் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மபூபதி இராசலிங்கம் அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

தம்பு இராசலிங்ககம் அவர்களின் அன்பு மனைவியும்,

சங்கரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

கலைவாணி உதயசேகரம் (கனடா) அவர்களின் அன்பு வளர்புத்தாயாரும் (மாமியாரும்),

காந்திமதி அவர்களின் அன்பு மாமியாரும்,

ரம்யன், திவ்யன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், மகேந்திரன், மனோகரன் மற்றும் செல்வபதி(ரதி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலாசினி (கனடா), காலஞ்சென்றவர்களான சிவகாமி, நளினி ஆகியோரின் மைத்துனியும்,

நளாயினி (கனடா), காலஞ்சென்ற கஜேந்திரன் மற்றும் சுஜேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரத்தின மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2022 11:10)