Mrs Tharmeswary Sachithanantham
Date of Birth: 27 July 1928 - Deceased: 08 November 2023
Segambut மலேசியாவை பிறப்பிடமாகவும், யாழ். உடுவில் கிழக்கு வேதாணியர் வளவு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுகிர்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் (Retired RMP) அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரி (நோர்வே), சக்திகுமார் (கனடா), சுபத்திரா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலகுமார் (நோர்வே), தர்மினி (கனடா), விஜயகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நீரஜா, தனுஜன், பிறேமித்தா, நர்மிதா, விதுஷா, ஆனந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதி, ஆரியா, சத்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ராமகிருஷ்ணா, விநாயகமூர்த்தி மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சரஸ்வதி மற்றும் நிசங்காதேவி, காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், ஒப்பிலாமணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-11-2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் 8.30 மணியளவில் காலி வீதி, கல்கிசையிலுள்ள மகிந்த மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
