திருமதி. தவமணி அரசரத்தினம்
தோற்றம்: 09 ஜூன் 1938 - மறைவு: 18 ஏப்ரல் 2025
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி அரசரத்தினம் அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - புதியாத்தை தம்பதியினரின் அருமை மகளும்,
அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசேந்திரன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
நிர்மலன், ஜீவரத்தினம், முரளிதாஸ், அகிலா, அகிலரத்தினம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலா, சுகித்தா, பரமேஸ்வரி, தபேன்திரன், வேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உசேனிக்கா, துசிக்கா, சர்மிகா, ஆர்த்திகா, லோசன், அபிஷா, அபிரா, அஷ்வரா, அஸ்வியா, வைசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
