திருமதி தவமணி இராஜகோபால்
தோற்றம்: 14 டிசம்பர் 1936 - மறைவு: 28 ஜனவரி 2020
யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மாதங்காவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தவமணி இராஜகோபால் அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னம்மா, பூதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி(பிரித்தானியா), சிவாஜினி, நந்தினி, ஆதவன்(பிரித்தானியா), நந்தகுமார், காலஞ்சென்ற நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கனகரத்தினம், பொன்மணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மாம்பிகை, ஹரிஸ் குணவர்தன, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஷானி(பிரித்தானியா), சுகேசன்(பிரித்தானியா), அனுஜன், ரதினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-02-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
