திருமதி. தவமணிதேவி சந்திரசேகரம்

தவமணிதேவி சந்திரசேகரம்

தோற்றம்: 03 ஜூலை 1949 - மறைவு: 23 ஏப்ரல் 2023

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சந்திரசேகரம் அவர்கள் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வடிவேலு சந்திரசேகரம் (கொழும்பு, கௌரி ரேடர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபோதினி (லண்டன்), சிவாஜினி (அவுஸ்திரேலியா), சபேசன், சதீஷன், சுரேசன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி (நோர்வே) மற்றும் குருபரன் (அவுஸ்திரேலியா), சியா, நிவாசினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வடிவேலு கந்தசாமி, வடிவேலு குலசேகரம், ராஜேஸ்வரி உபாசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 24-04-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் பி.ப 03.00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அவரது பிறப்பிடமான கரவெட்டி துன்னாலை அல்லையம்பதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு 25-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் இல்லத்தில் பி.ப 01.00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03.00 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2023 01:23)