திரு. தெய்வேந்திரம் ரவீந்திரன் (ரவி)
தோற்றம்: 31 மார்ச் 1967 - மறைவு: 07 செப்டம்பர் 2021
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் ரவீந்திரன் அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
யாழ். உரும்பிராயைச் சேர்ந்த சத்தியநாதன் யோகானந்தராணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சுதர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுஜன், ஹரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வேஸ்வரி, சர்வானந்தேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம், யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகுமார், அனிஷ்குமார், றோகினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,
ஜெயப்பிரியா, சுமதி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
அருட்சங்கர், ஆர்த்திகா, நிதர்சனன், நிறோசன், சங்கீதா, அபினாஷ், அஜீஷ், அக்ஷரா, அபிநயா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அக்ஷயன், அயிஷா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி பிரியாவிடை 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Aula Oleahof Uitvaartzorg எனும் முகவரியில் உள்ள பெரிய மண்டபத்தில் நடைபெறும்.
www.tamilthakaval.org
