திருமதி. தேவராசா செல்வராணி

(ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியை - யாழ் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி)

தேவராசா செல்வராணி

தோற்றம்: 01 செப்டம்பர் 1956 - மறைவு: 10 மே 2025

மலேசியாவினைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா செல்வராணி அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னரார், காலஞ்சென்ற நாகலிங்கம் - தனலட்சுமி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், 

காலஞ்சென்ற முருகேசு - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தேவராசா (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிருந்தா (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், காரைநகர்), பிரியங்கா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,

சீ.இந்திரகுமார் (சிறைச்சாலை அத்தியட்சகர் - யாழ்ப்பாணம்), பூ. தணிகைக்குமாரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

நடராசா (மலேசியா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஆகாஷ், அபூர்வன், தாரிக்கா, தஸ்வின், தாமிரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2025 05:34)