திருமதி. தேவராசா செல்வராணி
(ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியை - யாழ் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி)
தோற்றம்: 01 செப்டம்பர் 1956 - மறைவு: 10 மே 2025
மலேசியாவினைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவராசா செல்வராணி அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னரார், காலஞ்சென்ற நாகலிங்கம் - தனலட்சுமி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற முருகேசு - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தேவராசா (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிருந்தா (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், காரைநகர்), பிரியங்கா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
சீ.இந்திரகுமார் (சிறைச்சாலை அத்தியட்சகர் - யாழ்ப்பாணம்), பூ. தணிகைக்குமாரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
நடராசா (மலேசியா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, செல்வசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆகாஷ், அபூர்வன், தாரிக்கா, தஸ்வின், தாமிரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
