திருமதி. திலகவதி கருணாகரன்

(Director - Lanka Pharmaceutical (Pvt) Ltd)

திலகவதி கருணாகரன்

தோற்றம்: 13 மே 1942 - மறைவு: 04 ஜூன் 2025

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி கருணாகரன் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், வேலுப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற கருணாகரன் (நயினாதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசன்னாவின் பாசமிகு தாயாரும்,

கனகம்மா பாலினியின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளபாக்கியம், அம்பிகாபதி, இந்திராவதி, சந்திராவதி மற்றும் வித்தியாவதி, பாலேந்திரா, மகேந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், செல்லத்துரை, காங்கேயன், நித்தியானந்தன், பத்மநாதன், ராஜேஸ்வரி மற்றும், சரோஜினி, சரஸ்வதி, விஜயகுலராணி ஆகியோரின் மைத்துனியும், 

கரிஷ்மா, மயாங்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் (இல-28, அலெக்ஸாண்ட்ரா வீதி, வெள்ளவத்தை) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2025 04:00)