திருமதி. திலகவதி சோதிலிங்கம்
(முன்னாள் ஆசிரியை - சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யா/இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி)
தோற்றம்: 02 மே 1941 - மறைவு: 28 டிசம்பர் 2024
யாழ். நுணாவில் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திலகவதி சோதிலிங்கம் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - சின்னம்மா (எழுதுமட்டுவாழ்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோதிலிங்கம் (முன்னாள் அதிபர் - யா/கொழுப்புத்துறை இந்து மகா வித்தியாலயம், உப அதிபர்- இரத்மலானை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
மணிவண்ணன் (துஷி-இலண்டன்), முகுந்தன் (அவுஸ்திரேலியா), மதுமதி (அவுஸ்திரேலியா), கோகுலபாலன் (இலண்டன்), வைதேகி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகன்யா (இலண்டன்), முகுந்தன் (அவுஸ்திரேலியா), திலீபன் (HNB) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசபூபதி, புனிதவதி, கமலாதேவி, அருணாசலம் மற்றும் திருமதி சீதாதேவி, Dr. இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மானுஜன், ஆஜன், வர்ஷனா, அபிஷேக், லசானி, அருண் கிரிஷ், அனுஹாசினி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் (ஆறுமுகம் வீதி, நுணாவில் மேற்கு) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
