திருமதி. தில்லைநாதன் மகேஸ்வரி
தோற்றம்: 16 ஜனவரி 1951 - மறைவு: 07 ஜூலை 2025
யாழ். காரைநகர் செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், மணற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைநாதன் மகேஸ்வரி அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகசபை - தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் (மாலா) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேந்திரம் (பசறை), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேஸ்வரி (இலண்டன்), குகநந்தினி (கொழும்பு), குகனேசன் (வவுனியா), சுதன் (கரிகாலன் போட்டோகிராபி), சுதாகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
நகுலேஸ்வரன் (இலண்டன்), சதீஸ்குமார், சிவசெல்வி, ஜனார்த்தனி, திவ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றெவிஷா, கர்சினி, வேனிகா, றுக்ஷனா, கீர்த்திகா, கரிகாலன், காரிகை, கயல்விழி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் 10-07-2025 வியாழக்கிழமை காலை 7:00 மணியளவில் மணற்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
