திரு. தில்லைநாதன் நடராஜா
(முன்னாள் விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்.)
தோற்றம்: 03 ஜூலை 1950 - மறைவு: 27 மார்ச் 2025
யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், பிரித்தானியா- Saray ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. தில்லைநாதன் நடராஜா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - சின்னத்தங்கம் தம்பதியினரின் மூத்த புதல்வனும்,
ஐயாத்துரை - கௌரீஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பத்மினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
பிரவீண், பிருந்தா, பிரம்மா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரநாதன், சாந்தகுமாரி மற்றும் நகுலகுமாரி (சுவிஸ்), ஜெயகுமாரி (கனடா), கமலகுமாரி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற சிவானந்தன், இரத்தினம், செல்வராம், ஜெயக்குமார், நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீனா, சயந்தன், ஜெயந்தன், வஜ்ரன், திவ்வியா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபன், சங்கீதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-04- 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Angel Funeral of Surrey Ltd (1103 London Road, Thornton' Heath CR7 6JJ) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் South London Crematorium (Rowan Road, Streatham, Wandsworth' London, SW 16 5JG) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
