திரு. தில்லைநாதர் சண்முகதாஸ்
தோற்றம்: 24 ஜூலை 1940 - மறைவு: 27 ஏப்ரல் 2022
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதர் சண்முகதாஸ் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நவரத்தினம், நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சோமசேகரம், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசரஸ்வதி, காலஞ்சென்ற வசந்தகுமாரி ஆகியோரின் அன்புக் கணவரும்,
கிருபாமூர்த்தி (பிரான்ஸ்), விக்கினேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயகுமார், கிருபாநந்தன் (லண்டன்), கிருபாநந்தினி (இலங்கை), கிரிசா (கனடா), பாரதா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
சியாமளாதேவி (பிரான்ஸ்), துளசி (பிரான்ஸ்), கலைச்செல்வி (லண்டன்), கிருபாகரராசா (இலங்கை), செல்வச்சந்திரன் (கனடா), இலங்கேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பஞ்சாச்சரம், கமலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிசாந்த், கிசானி, திவியா, கவியா, தருண், மதுமிதா, தரிக்ஷா, பவிக்ஷா, யனிஸ்கா, கிசோபன், யுவேகா, துலக்சன், சுதன், சுவர்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
