திரு. தில்லையம்பலம் சண்முகநாதன்

(Former Manager of Grindlays Bank)

தில்லையம்பலம் சண்முகநாதன்

தோற்றம்: 01 டிசம்பர் 1934 - மறைவு: 30 மே 2025

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் சண்முகநாதன் அவர்கள் 30-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் - வேதவனப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோமதியின் அன்பு அப்பாவும்,

ஞானசேகரத்தின் அன்பு மாமனாரும்,

டாக்டர் காயத்திரி, சண்முகப்பிரியன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற பாலசுந்தரி, மதுரம் (அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், குலேந்திரன், சிவனடியான் ஆகியோரின் மைத்துனரும்,

தையல் நாயகியின் (அமெரிக்கா) உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2025 04:00)