திரு திருஞானச்செல்வம் ஆனந்தநடேசன் (ஜோதி)

(Coral Tasty Food Industries உரிமையாளர்)

திருஞானச்செல்வம் ஆனந்தநடேசன் (ஜோதி)

தோற்றம்: 19 செப்டம்பர் 1960 - மறைவு: 29 ஜனவரி 2024

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், 117 ஐயனார் வீதி, தட்டாதெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருஞானச்செல்வம் ஆனந்தநடேசன் அவர்கள் நேற்று 29-01-2024ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திருஞானச்செல்வம் - புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான விஜயசிங்கம் - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சரவணஹரன் (உயர்தர மாணவன் யாழ் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நளினி அவர்களின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பத்மநாதன் (ஆயுள்வேத வைத்தியர்) மற்றும் தயாபரன் (தயா அச்சகம்), விஜயராணி, விஜயதேவி, தயானந்தன், விஜயகுமாரி, விஜயகௌரி, தயாபாலன் (ஆசிரியர்- யாழ் இந்துக் கலலூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமரகுருபரன், கோகிலறமணன், செல்வபாரதி, பவதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியைகள் நாளை 31-01-2024ம் திகதி புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 1:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2024 10:09)