திருமதி. திருமுருகன் சாந்தி

திருமுருகன் சாந்தி

தோற்றம்: 06 செப்டம்பர் 1966 - மறைவு: 06 ஆகஸ்ட் 2024

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி- Bad Neuenahr Aw யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தி திருமுருகன் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன்-சாரதாம்பிகை (இலண்டன்) தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சீவரட்ணம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

திருமுருகன் அவர்களின் அன்பு மனைவியும்,

வினுசாண், நர்சிகா, பிரவீன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

திருமதி. பொற்சபானந்தம் சரோஜா, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

உமாதேவி, பத்மதேவி, கமலாதேவி, சிவகுமார், திருமதி சிவதாசன் சிறிதேவி, சந்திராதேவி, திருமதி ஜெயரூபன் அபிராமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜன், கஜனி ஆகியோரின் சித்தியும்,

நிரோசன், ஜெசிக்கா, ஜெயன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2024 சனிக்கிழமை முதல் மாலை 6.30-7.30 மணி வரை Franken Str 6-8 (53474 Bad Neuenahr-Ahrweiler) இவ் பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-08-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00-4.30 மணி வரை இறுதிக்கிரியைகள் Wullubriordusstrasse-20 ((53474 Bad Neuenahr-Ahrweiler) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2024 04:00)