செல்வி. திவாகரி சிவகணநாதன்
(சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி- உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பவியலும் 2ம் வருடம்)
தோற்றம்: 16 டிசம்பர் 1998 - மறைவு: 31 ஜனவரி 2022
யாழ். இணுவில் மேற்கு செட்டிவளவு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகணநாதன் திவாகரி அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகணநாதன், அபரஞ்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
கஜப்பிரியா அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
அன்பரசி ஸ்ரீரமணன் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
அழகிரி நிர்மலா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சர்மிலன், சாம்பவி, கார்த்திகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அபிநயா, அபிராம், அபிரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
www.tamilthakaval.org
