திரு. தியாகராஜா ஜெயக்குமாரசூரியன்

தியாகராஜா ஜெயக்குமாரசூரியன்

மறைவு: 14 அக்டோபர் 2021

அமரர் திரு தியாகராஜா ஜெயகுமாரசூரியன் (சூரி). கொழும்புத்துறை வீதி, சுண்டிக்குழி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், சூரிச்-சுவிற்சர்லாந்து, வத்தளை மற்றும் மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. தியாகராஜா ஜெயக்குமாரசூரியன் அவர்கள் 14.10.2021 அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. தியாகராஜா (அதிபர்) – திருமதி. ஜெயராணி (உப அதிபர்) ஆகியோரின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தா – தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரால்ட் பிரகாஷ் (தமிழன்பன்) (ஜெர்மனி) இன் அன்புத் தகப்பனாரும்,

பூரூஜின் நிரோஷாவின் அன்பு மாமனாரும்,

ஜெயபாலச்சந்திரன் (சந்திரன்), காலஞ்சென்ற ஜெயலோகேந்திரன் (இந்திரன்), மனோகரி ஜெயகாந்தி (மனோ) – லண்டன், குமுதினி ஜெயகுமாரி (குமு) – லண்டன், சாந்தி ஜெயவதனி (வதனா) – லண்டன், ஜெயகமலகாந்தன் (காந்தா) – லண்டன், காலஞ்சென்ற ஜெயதேவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற இந்திராணி, நந்தினி, ஜோ அன்றனி, காலஞ்சென்ற டலஸ் (f)பிட்ச், காலஞ்சென்ற சுகுமார், அல்த்தியா, மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்தியாகன், சந்திரியா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரது ஈமக்கிரியைகள் நாளை 15.10.2021 (வெள்ளிக்கிழமை) அன்று அன்னாரது மாங்குளம் இல்லத்தில் நடைபெற்று, மாங்குளம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- மகன் – பிரகாஷ்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2021 11:53)