Miss. Thiyagakumar Avishka
(ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் - முகாமைத்துவ பீடம்)
Date of Birth: 09 May 2000 - Deceased: 10 April 2025
கொழும்பைச் சேர்ந்த செல்வி. தியாககுமார் அவிஷ்கா அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், இறம்பொட காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை - காமாட்சி தம்பதியினர், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை - தெய்வயானை தம்பதியினரின் பேத்தியும்,
தியாககுமார் - வனிதா தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,
அணிஷின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2025 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
