திரு. தோமஸ் அன்ரனி
(ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்– புலோலி)
தோற்றம்: 07 மார்ச் 1940 - மறைவு: 26 பெப்ரவரி 2026
யாழ். தும்மளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா - மெல்போர்னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தோமஸ் அன்ரனி அவர்கள் 26-02-2026 அவுஸ்திரேலியாவில் 26.02.2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் - ரோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பிலிப்ஸ் - பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி கிரேஸ் கிறிஸ்டினா அவர்களின் அருமை கணவரும்,
லக்ஷ்மன் (இலண்டன்), யோகலா (அவுஸ்திரேலியா), பமலா (அவுஸ்திரேலியா), டேமியன் (அவுஸ்திரேலியா), ஷமிலா (பிரான்ஸ்). நொயலீன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
நிலாந்தி (இலண்டன்), நோபேர்ட் (பிரான்ஸ்), ஹரிகீர்த்தனா (அவுஸ்திரேலியா), யோன்சன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,
ரஜீத், மனீஷ், நொயல், ஹாசினி, ஹெலனி, ஹசிதா, நிலா, வேனில் ஆகியோரின் அன்பு பேரனாரும்,
புஸ்பராணி அவர்களின் அருமை சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி காலை 9.00 மணியளவில் பருத்தித்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
