Mrs. Thurairajah Thavamany
Date of Birth: 07 September 1938 - Deceased: 12 January 2025
யாழ். நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜா தவமணி அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - அன்னமுத்து தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரவீந்திரன் (DGM-Baurs & CO, Colombo), புவிச்சந்திரன் (பொறியியலாளர் - இலண்டன்), ரூபிச்சந்திரன் (கணக்காளர் - அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நளாயினி (கொழும்பு), சிவாஜினி (இலண்டன்), நிரூபா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகன், சர்மினி, சிவேன், சியாம், தனுஜ், சுவாத்தி, ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கணேசன், காலஞ்சென்ற தவமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
