திரு. துரைரத்தினம் கதிர்காமலிங்கம்
தோற்றம்: 16 டிசம்பர் 1956 - மறைவு: 03 பெப்ரவரி 2022
யாழ். கொல்லன்கலட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைரத்தினம் கதிர்காமலிங்கம் அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானிதிசி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆரபி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
ரவீந்திரன், முருகானந்தம், நந்தினி, இளமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதினி, ஸ்ரீகாயத்ரி, பத்மநாதன், நளாயினி, விக்னேஸ்வரன், சர்வேஸ்வரி, ஸ்ரீகுமாரி, குகநேசன், திருவருட்செல்வன், காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,
அருண், ஆரூரன், அபர்ணா, கரண், நாகநர்த்தனன், தர்சனா, நாககீர்த்தனன் ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,
கோபிநாத், ரிஷிகேசன், நிருத்தியா, தர்ஷிகா, ஸ்ரீலவன், தரணிகா, மோகன்ராம், மோகனாங்கி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
