திரு. துரைரத்தினம் சிவகுமார்

துரைரத்தினம் சிவகுமார்

தோற்றம்: 25 ஜூன் 1962 - மறைவு: 16 ஏப்ரல் 2021

வளலாயைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை  வதிவிடமாகவும் கொண்ட திரு துரைரத்தினம் சிவகுமார்  [(ஒளி )(KTS லொறி உரிமையாளர்)] அவர்கள் 16/04/2021 வெள்ளிக்கிழமை காலமானார் 

அன்னார் புஷ்பராணியின் (பிரதேசசபை, புத்தூர்) பாசமிகு கணவரும்,
 
துரைரத்தினம் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ,
 
ஸ்ரீகனகசபேசன் (பெரியப்பு), சந்திரகுமார் (சின்னப்பு) , திருக்கேதீஸ்வரன் (குழந்தை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
சீவரத்தினம்,  சச்சிதானந்தம், பேரானந்தம், பராசக்தி,  பவானி கமலாவதி, பத்மாவதி மல்லிகாதேவி (சின்னச்சோலை),  யோகேஸ்வரி (யோகம் ரீச்சர், முன்னாள் அதிபர் யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி), இராஜவிநோதினி (ஆசிரியர், யா/அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,
 
சிவப்பிரியன் (மருத்துவபீட மாணவன், இரண்டாம் வருடம் ), சுகப்பிரதா  (யா/யாழ்  இந்து மகளிர் கல்லூரி), தசாருதன்(யா/யாழ் இந்து கல்லூரி) ஆகியோரின் சிறிய தகப்பனுமாவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள்  18/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை சிறுப்பிட்டி மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
       
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல் :-  சிவப்பிரியன்(பெறாமகன்)
 
கைபேசி :-  + 94 77 513 0732
 
         ♦<>கண்ணீர்க் காணிக்கை<>♦
             ======================
     அமர் துரைரத்தினம் சிவகுமார் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு வளலாய் பழையமாணவர் சங்கம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் 
                  ஓம்  சாந்தி   சாந்தி   சாந்தி
                 <><>   <><>      <><>     <><>

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2021 04:17)