திரு. துரைசாமி பிள்ளை அருணாசலம்
தோற்றம்: 13 மே 1956 - மறைவு: 05 ஜனவரி 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமத்தை பூர்விகமாகவும், கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி பிள்ளை அருணாசலம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.
அன்னார், துரைசாமி பிள்ளை (சரஸ்வதி ஸ்டோர்ஸ்) - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
துரைதர்ஷன், துஷ்யானந்த், சம்ரித்தா ஆகியோரின் தகப்பனாரும்,
பிரியாவின் மாமனாரும்,
ஆரினின் பாட்டனாரும்,
அம்பிகா, காலஞ்சென்ற சகுந்தலா, மாலதி, வசந்தா, கௌரி, காலஞ்சென்ற நடராஜா, சரஸ்வதி, சஷிகலா, தர்சிகா ஆகியோரின் சகோதரரும்,
கனகராஜ், கருணாநந்தம், சுகுமார், விஜயலிங்கம், சுந்தரலிங்கம், வாசுதேவன், ரமேஷ்குமார், ஜெயகருணாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-01-2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
