திரு. துரைச்சாமி சிவராசா (கண்ணன்)

துரைச்சாமி சிவராசா (கண்ணன்)

தோற்றம்: 03 நவம்பர் 1961 - மறைவு: 02 டிசம்பர் 2024

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி சிவராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைச்சாமி-கனகமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

கனகரத்தினம்-தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், மயூரி, தமிழினி (திசா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஈசா (Esha) அவர்களின் அன்பு மாமனாரும்,

மனோன்மணி, சிவகுமார், சகுந்தலாதேவி (சாரதா), சிவபாலன் (காந்தி), சிவலிங்கம் (ஆனந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மஜீஸ்கா (லக்சுமி) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-12-2024 புதன்கிழமை அன்று காலை 8:00 - 9:00 மணி வரை T CRIBB & SONS Funeral Directors (Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் Forest Park Cemetery & Crematorium (Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2024 05:00)