திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை

(ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை - ஆறுமுக வித்தியாசாலை, சுழிபுரம்)

துரைசிங்கம் மகிழாம்பிகை

தோற்றம்: 08 ஜூன் 1955 - மறைவு: 11 ஜூலை 2025

யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைசிங்கம் மகிழாம்பிகை அவர்கள் 11-07-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை (செட்டி வாத்தியார்) - இலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

துரைசிங்கம் (அச்சண்ணை - ஓய்வுபெற்ற களஞ்சியப் பொறுப்பாளர், தெல்லிப்பளை கூட்டுறவுச் சங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தர்மதாசன், சுபத்திரா, தனபாலசிங்கம் (சுவிஸ்), கந்தராசா, பாலச்சந்திரன் (யாழ். மாநகரசபை), இராஜராஜேஸ்வரி (ஜேர்மனி), மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணானந்தன், வசந்தநாயகி (சுவிஸ்), தர்மினி, வளர்மதி (ஆசிரியை - யாழ். இந்து ஆரம்பப்பாடசாலை), மகேந்திரநாதன் (ஜேர்மனி), சிவகுமார் (ஆசிரியர் - மகாஜனாக்கல்லூரி, தெல்லிப்பளை), காலஞ்சென்றவர்களான பகவதி - கனகசுந்தரம், காலஞ்சென்றவர்களான புஸ்பராஜா - செல்லப்பாக்கியம், விநாயமூர்த்தி - வசந்தயோகம் (ரூபி - GIT Institute Director, Colombo-06), இராஜேஸ்வரி - விஜயராகவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கஜரூபன் (ஆசிரிய மாணவன் - வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி), சுகன்யா (ருகுணு பல்கலைக்கழகம்), மதுஷன் (ஜேர்மனி), மிதுனன் (ஜேர்மனி), கிருசான் ஆகியோரின் பெரியம்மாவும்,

மாருதன் (சுவிஸ்), சாருஜன் (சுவிஸ்), சர்வினா, கிருசாந்தி (ஆசிரியை - யாழ். மத்திய கல்லூரி) ஆகியோரின் மாமியும்,

சுதாகர் (கணக்காளர் - இ.போ.ச தலைமைக்காரியாலயம்) - பத்மாசினி (மொழிபெயர்ப்பாளர் - சுகாதார அமைச்சு), சுதா (சிரேஷ்ட விரிவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம்) - கலாநிதி சிறீதரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் - கிழக்குப் பல்கலைக்கழகம்), திலீபன் (கனடா) - கௌரி (கனடா), Dr. ஜனகன் (IDMNC International Chairman) - சாலினி (வைத்தியர்), சர்மிலா (இலண்டன்) - செந்தூரன் (இலண்டன்), பொன்னப்பெருமாள் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கமநல சேவை நிலையம், சண்டிலிப்பாய்) ஆகியோரின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2025 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)