திருமதி. உமாகாந்தன் வனஜா

(செயலாளர்-ஏழாலை மேற்கு, ஶ்ரீ விநாயகர் ஐக்கிய நாணய சங்கம்)

உமாகாந்தன் வனஜா

தோற்றம்: 24 மே 1964 - மறைவு: 03 ஆகஸ்ட் 2024

யாழ். ஏழாலை மேற்கினைப் பிறப்பிடமாகவும், "குமரகிரி" ஏழாலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகாந்தன் வனஜா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்-வேதநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நாகேந்திரம் உமாகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி.வி.நந்திதா, திருமதி.உ.வர்ஜிதா, காலஞ்சென்ற உ.ராம்சரன், செல்வி.உ.மானிஷதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ம.விஜயாலயன், ச.உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்வன் வி. ஜமிகன் வேத், செல்வன் உ. இயலிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பா.பாலமுரளிதரன் (பிரான்ஸ்), பா.பாலசுரேஷ் (சுவிஸ்), பா.பானுகோபன் (இலண்டன்), பா.பாலதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:- 

"குமரகிரி"

ஏழாலை தெற்கு, சுன்னாகம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2024 04:00)