திருமதி. வைகுந்தநாதன் தவரஞ்சிதம்

வைகுந்தநாதன் தவரஞ்சிதம்

தோற்றம்: 17 ஜனவரி 1959 - மறைவு: 03 ஜனவரி 2023

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் கொண்ட வைகுந்தநாதன் தவரஞ்சிதம் அவர்கள் 03-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைகுந்தநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வசிகரன், பிரதீபன், சிவகெளரி, காலஞ்சென்றவர்களான கெளரிதாசன், கெளசிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜனி, சரண்ஜா, தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுசன், மேனுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தயாரஞ்சிதம், தனரஞ்சிதம், அம்பிகைதாசன், சிவதாசன், குமரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், சிவகுமார், குமுதினி, விக்னேஸ்வரி, முகுந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் மாவிட்டபுரம் தெற்கு கொல்லங்கலட்டி, களுவெட்டி ஒழுங்கை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சங்காடு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2023 03:13)