திரு. வையிரமுத்து இராசேந்திரம்
தோற்றம்: 19 டிசம்பர் 1961 - மறைவு: 13 செப்டம்பர் 2024
யாழ். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வையிரமுத்து இராசேந்திரம் அவர்கள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வையிரமுத்து-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசிகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
வைஸ்ணவி, யந்துர்சன் (பிரான்ஸ்), பிரவீனா, விதுசன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
இராசமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கணேசராணி, மனதரன், பாலச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் (ஆசிரியர் -யா/பெரியபுலம் மகா வித்தியாலயம்), ஜெயசுதா (கனடா) ஆகியோரின் சகோதரனும்,
புனிதராஜா, ரஞ்சினிதாஸ், காலஞ்சென்ற சாந்தகுமாரி, ரஜனி, சர்மிளா, சிவபாலன், காண்டீபன், அம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொபிதா, தினகரன், ஜீவகரன், ரஜிதா, பவிதா, பானுஜன், பாவனா, மதுசன், தீப்தி, சகித் ஆகியோரின் மாமனாரும்,
கம்சா, தர்சிகன், கிரிசாந், பிரசாந், மஞ்சுயன், ஆருயன், ஆதீனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார் .
அன்னாரின் இறுதிகிரியைகள் நாளை 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று புகழுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி காளையன்புலம் இந்து மயானத்திக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
