திரு. வைத்தியலிங்கம்பிள்ளை பாலகுமார்
மறைவு: 07 மார்ச் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் புத்தினம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம்பிள்ளை பாலகுமார் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், கள்ளிக்குடி கிராமம் காலஞ்சென்றவர்களான கருப்பையாப்பிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
ஆனந்தவள்ளி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரிகுமாரின் (அருண்) பாசமிகு தந்தையும்,
மதுஷாலினியின் அன்பு மாமனாரும்,
புண்ணியமூர்த்தி (RMSR) - காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராமசந்திரன், அருணாச்சலம், சண்முகநாதன் மற்றும் ஜோதிகுமார் (இந்தியா), கனகாம்பிகை, நளாயினி (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,
கணேசமூர்த்தி (கண்ணன்), இலங்கேசன் (பாபு), தினகரன் (ரகு) ஆகியோரின் மாப்பிளையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கெரவலப்பிட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
