Mr. Vallipuram Arunthavan (Sinnathamby)
Date of Birth: 16 March 1947 - Deceased: 25 August 2025
கொழும்பு - கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், இல-20B, 11ஆம் ஒழுங்கை கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அருந்தவன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வல்லிபுரம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
நமசிவாயம் - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுவேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
மிருஸ்னியின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, வில்வராணி, இந்திராணி, கமலேஸ்வரி, புஸ்பராணி, காலஞ்சென்ற தருமராஜா, செல்வராஜா, சிவக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-08-2025 புதன்கிழமை அன்று புஞ்சி பொரளை லங்கால மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
