(October 1st, 2025 at 11AM Sri Lanka Time)

திரு. வல்லிபுரம் பாலசுப்பிரமணியம்

வல்லிபுரம் பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 24 செப்டம்பர் 1938 - மறைவு: 28 செப்டம்பர் 2025

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  வல்லிபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மூத்த புத்திரனும்,

முருகவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தா, விஜித்தா, ரஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மேந்திரா, உதயசேகரன், ஜெயராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரனுஜன், சாருகா, கரிஷா, யஸ்வன், யஸ்னவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2025ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இருளன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2025 01:40)