திரு. வல்லிபுரம் கமலநாதன்
(முன்னாள் பிரதி நகரபிதா பருத்தித்துறை நகராட்சி மன்றம்)
தோற்றம்: 11 ஜூன் 1946 - மறைவு: 17 ஜூன் 2024
யாழ். தும்பளை திகிரியைப் பிறப்பிடமாகவும், ஆத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கமலநாதன் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-நல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,
பரமநாதன்-வள்ளிமுத்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவநாயகி அவர்களின் அன்பு கணவரும்,
தயாளன் (கனடா) அவர்களின் அன்புத்தந்தையும்,
சயந்தினியின் அன்பு மாமனாரும்,
புருஷோத், அத்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இராமச்சந்திரன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், மகாதேவன், பாலச்சந்திரன், பரிமேல்அழகன் ஆகியோரின் சகோதரரும்,
சிவநாதன், காலஞ்சென்ற பொன்னையா, லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் நடைபெற்று, சுப்பாமட இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
